திருவனந்தபுரம், ஏப். 1- இந்தியாவைக் குறித்து பொது வான மதிப்பீடு. ஜனநாயகம் சிறப்பான முறையில் உள்ளது என்பதாகும். ஆனால், இது ஜனநாயகம் தானா என்கிற சந் தேகம் உலக அரங்கில் வலுத் துள்ளது. நமக்கும் இந்த அனுப வம் ஏற்பட்டுள்ளது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரம் நெய்யாற் றின்கரையில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பன்னியன் ரவீந்திரனுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சா ரத்தை தொடங்கிய பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:
இப்போது மக்கள் முடிவு செய்துவிட்டனர்
இந்த தேர்தலின் முக்கியத்து வம் குறித்து ஆரம்பக்கட்டத்தி லேயே மக்கள் ஒரு நிலைப்பாட் டுக்கு வந்துள்ளனர். சாதாரண மாக தேர்தல் பணிகளில் ஒன் றிரண்டு கட்டங்களை கடந்த பிறகே ஒரு பகுதியினர் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதை முடிவு செய் வார்கள்.
ஆனால், முற்றிலும் மாறு பட்ட ஒரு நிலையை இந்த தேர்தலில் பார்க்கலாம். அதற்கு காரணம் நமது நாட்டின் இன் றைய சூழலேயாகும். நாடு ஆபத்துக்குள்ளா வதை தடுக்க வேண்டும் என அனைவரும் சிந்திக்கின்றனர்.
நாடு ஆபத்தின் விளிம்பில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.
நமது நாட்டின் மதச்சார் பின்மை பாதுகாக்கப்பட வேண் டும் என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் மதச்சார்பின் மையை பாதுகாக்கவே நமது மக்கள் விரும்புகின்றனர். அத னால்தான் மதச்சார் பின் மைக்கு ஆபத்து விளைவிக் கும் ஒவ்வொரு நிகழ்வும் நாட்டில் ஏற்பட்டபோதெல்லாம் மக்கள் கவலை தெரிவித்தனர்.
உலக அமைப்புகள், முக்கிய நாடுகள் விமர்சனம்
இந்தியா மதச்சார்பின் மைக்கு பெயர்பெற்ற நாடு என்கிற நிலை யில், பொதுவாக உலகத்தின் முன்பு அங்கீகாரம் பெற்றிருந்தது. அதை இழக்கும் நிலை மோடி ஆட்சியில் ஏற் பட்டுள்ளது. இந்தியாவின் நிலைப் பாட்டை உலக அமைப்புகள், முக் கியமான நாடுகள் விமர் சிக்கின் றன.
இதில் அய்க்கிய நாடுகள் சபையும் உள்ளது; பன்னாட்டு மன்னிப்புச் சபையும் உள்ளன. அமெரிக்கா, தெற்காசிய நாடு கள் என பல நாடுகள்- நமது நாட்டுடன் நல்லுறவு கொண்ட வர்கள் உட்பட கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத் தியுள்ளன. உலகம் நம்மைப் பார்த்து, நீங்கள் அமல்படுத்து வது ஜனநாயக முறைதானா? என்று கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள் ளது.
இந்தியாவுடன் நல்லுற வைப் பேணி வரும் ஜெர்மனியும் அமெரிக்காவும் அந்த கேள் வியை எழுப்பி வருவதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில் நீதி நியாயங்கள் எப்படி நடக் கிறது? இங்கு சட்டத்தின் பாது காப்பு அனைவருக்கும் பாகு பாடின்றி கிடைக்கிறதா? சட் டத்தின் முன்பு அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறார் களா? தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்களை அச்சுறுத் தும் நிலை உள்ளதா? அப்படி இருந்தால் அது ஜனநாயகம் ஆகுமா? என்பது போன்ற சந் தேகங்களை உலக நாடுகள் எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் மதச்சார்பின் மையை ஆபத்துக்குள்ளாக்கும் முயற்சிகள், மறுபுறம் நாட்டின் ஜனநாயகத்தை தகர்க்கும் முயற்சிகளும் நடக்கின்றன.
சுதந்திரம் ஆபத்துக்கு உள்ளாகும் நிலை
நமது நாட்டின் சுதந்தி ரத்தை முழுமையாக அனுப விக்கும் நிலை இருந்திருக்க வேண்டும். மக்கள் அதையே விரும்புகிறார்கள். சுதந்திர இந் தியா சாதாரண நிலையில் அனைத்து விதமான செயல் பாடுகளுக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருக்க வேண் டும்.
ஆனால் இங்கே பல சுதந்தி ரங்கள் பறிக்கப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி லான நிலைப்பாடே, அது நம் பிக்கை என்றாலும் கருத்துகள் என்றாலும் மேற்கொள்ள வேண்டும் என கருதுகிறார்கள்.
சுதந்திரம் ஆபத்துக்கு உள் ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றின் மொத்த வெளிப் பாடு நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதா கும்.
நாட்டு மக்கள் மோடியை வீழ்த்துவது உறுதி
இன்று தேசமே ஆபத்தான கட்டத்தின் விளிம்பில் உள் ளது. அத்தகைய ஒரு சூழ்நிலை யில் இந்த தேர்தலை எதிர் கொள்கிறோம். இந்த தேர்த லில் மதச்சார்பின்மை, ஜனநா யகம், சுதந்திரம், தேசிய ஒரு மைப்பாடு, ஒட்டுமொத்தமாக நமது நாட்டின் பாதுகாப்பு என்பதையே மக்கள் விரும்பு கிறார்கள்.
அதற்கேற்ற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் சிந்திக் கிறார்கள். இதற்கு எதிரான நிலைப்பாடு களுக்கு தலைமை தாங்கும் பாஜகவை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்பதே நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள உணர்வு.
அதன் தொடர்ச்சியாக மாநிலங்கள்தோறும் விரிவான ஒற்றுமை ஏற்பட்டுள்ளதை பார்க்கலாம். தங்களை வீழ்த்த முடியாது என்கிற எண்ணத்தில் தற்போது பாஜகவும் ஒன்றிய அரசும் உள்ளன. நரேந்திர மோடி அப்படி தோல்வியுறத் தக்கவர் அல்ல என்ற பிரச்சார மும் கட்டவிழ்த்து விடப்பட் டுள்ளது.
கேரளத்தில் உள்ள மக்கள் ஏற்கனவே மோடியை இங்கு தோற்கடித்தவர்கள். நாடு முழுவதும் இப்போது அந்த நிலை ஏற்படும்.
இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.