பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் சூடு!

1 Min Read

“தேர்தல் பத்திரத்தின் எண்” உள்ளிட்ட முழு விவரங்களையும் வழங்க எஸ்பிஅய்-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, மார்ச் 15 தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. அதன்படி எஸ்பிஅய். வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடை யாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள்தான் இருந்தன.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று (15-3-2024) விசா ரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதி மன்றம் “அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஅய் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வில்லை.
தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம் – டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கள்கிழமைக்குள் (18-3-2024) வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண் டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது.
மேலும், 18-3-2024 அன்று இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தரவுகளை சீலிட்ட கவரில் வழங்கிய தேர்தல் ஆணையம், இணைய தளத் தில் பதிவேற்றப்படுவதின் நகல் வேண் டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *