கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

31.1.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை

* ‘பீகாரில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். இதற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் தேவையில்லை’ என நீதி நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு.
* சமூக நீதி தான் தமிழ் நாட்டு மக்களின் அடையாளம்; ஜாதியோ, மதமோ அல்ல, சட்டமன்றத் தலைவர் மு.அப்பாவு
* தமிழ்நாட்டில் முதலமைச்சர் அறிவித்த, அதிகாரிகள் கிராமங்களில் ஒரு நாள் தங்கி குறை தீர்க்கும் முறை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம்’ இன்று முதல் தொடக்கம்.
* அயோத்தி தவிர்த்து, 1947-க்கு முன்பு இருந்த நிலையை மாற்றி வழிபாட்டுத் தலங்களில் எந்த மாற்றமும் கூடாது என்ற 1991 சட்டத்தை பாஜக – ஆர்.எஸ்.எஸ். குழி தோண்டி புதைத்து வருகிறது என சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* பாஜக எதிர்க்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிதிஷ் குமாரும் விரும்பவில்லை. எங்கள் கூட்டணி வற்புறுத்தியதால் அதனை மேற்கொண்டார். அதன் காரணமாகவே பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளார் என ராகுல் காந்தி தாக்கு.
* சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குசீட்டில் பேனாவால் எழுதி செல்லாத ஓட்டாக்கிய அதிகாரி: தில்லுமுல்லு செய்து பாஜ வெற்றி. இதன்படி மக்களவைத் தேர்தலில் பாஜக என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள் என ஆம் ஆத்மி, காங். குற்றச்சாட்டு. டில்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு.
* ஹிந்துக்கள் அல்லாதவர்கள், நாத்திகர்கள் பழனி கோயிலில் நுழைய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சிறீமதி உத்தரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

*ஹனுமன் கொடி அகற்றம்; கோட்சேவின் சந்ததியினர் அமைதியைக் குலைப்பதாக கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்.

தி டெலிகிராப்:

* இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் முக்கிய அளவீடுகள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, உற்பத்தி மறுமலர்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடு – உண்மையில், தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகின்றன என்கிறார் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக பேராசிரியர் அசோகா மோடி.
* மத உணர்வை தூண்டி நாடு முழுவதும் உள்ள மக்கள் மீது மத நடைமுறைகளை திணிக்க பாஜக – காவிக் கூட்டம் முயற்சிப்பதாக மம்தா குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *