கடவுள் படத்தை காட்டி மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

1 Min Read

அய்தராபாத்,ஜன.26- தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில், நாடாளு மன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பூத் கமிட்டி ஊழியர் கூட்டம் நடை பெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக் குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு நெருக்கடியில் இருக் கும்போது, பாகிஸ்தான், சீனா என்று சாக்குப் போக்குகளை கூறுகிறார் பிரதமர் மோடி. கடவுளின் படத்தை காட்டி மக்களின் வயிற்றை நிரப்ப முடியாது. எனவே மக்கள், பிரதமர் மோடியின் பொறியில் விழ வேண் டாம். பிரதமர் மோடி ஏற்கெனவே பல உத்தர வாதங்களை அளித்தார். அவற்றில் எதுவும் அவர் நிறைவேற்றவில்லை” என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *