பகுஜன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரிக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்கம் ரத்தாகிறது

2 Min Read

புதுடில்லி. டிச. 16- உத்தரப் பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி யின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் அன்சாரி யின் தண்டனையை தற்காலிக மாக நிறுத்தி வைப்பதாக நேற்று (15.12.2023) உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996இ-ல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த நந்த் கிஷோரை கடத்தியது, 2005-இல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணானந்த் ராய் கொலை செய்யப்பட்டது ஆகிய வழக்குகளின் சந்தேகத் தின் அடிப்படையில் அப்சல் அன்சாரி மீதும் அவரது சகோ தரர் முக்தார் அன்சாரி மீதும் 2007-ஆம் ஆண்டு குண்டர் சட்ட வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணை காசிபூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், இந்த வழக்கில் அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு கள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப் பட்டது. முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும் ரூ.5 லட்சம் அபராத மும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அப்சல் அன்சாரி காசிபூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்தத் தீர்ப்பையடுத்து அவர் நாடா ளுமன்ற உறுப்பினர் பதவியிலி ருந்து தகுதி நீக்கம் செய்யப்பட் டார்.

இந்நிலையில், தன் மீதான தண்டனையை நிறுத்தி வைக் கும்படி அவர் அலகாபாத் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய் தார். கடந்த ஜூலை மாதம், அவரது மனுவை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. சில நிபந்தனைகளை முன்வைத்து அவர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது. நீதிபதிகள் சூர்ய காந்த் திபங்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவரது தகுதிநீக்கம் ரத்தாகி றது. எனினும், மக்களவையில் அவர் வாக்களிக்க அனுமதி யில்லை என்றும் மக்களவை கூட்டங்களில் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படு வதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரது தண்டனை தொடர்பாக முடிவு எடுக்க அலகாபாத் உயர் நீதி மன்றத்துக்கு 2024-ஆம் ஆண்டு ஜூலை 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *