டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட் போராட்டம்: அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) உச்சநீதிமன்றம் ரத்து செய்து, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்தது. மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், டெல்லியில் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டப் பேரணியையும் சி.ஜே.பி. அமைப்பு திரும்பப் பெற்றது; இழப்பீடு வழங்க கொள்கை வகுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*எரிந்த மனித உடலை உண்ணும் சாமியார்: பாஜக ஆளும் மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் இறுதி நிகழ்வூ செய்யப்பட்ட சிதையைத் தொந்தரவு செய்ததாகவும், எரிந்த மனித உடல் எச்சங்களை உட்கொண்டதாகவும் சாமியார் கைது. காளி ‘காளிநந்த கிரி’ என்ற சாமியார், எரியும் சிதையில் இருந்து பகுதி எரிந்த மனித உடல் எச்சங்களை உட்கொண்டதாகவும், அதை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் கைது செய்யப்பட்டார்.
தி இந்து:
* பீகாரின் 75% இடஒதுக்கீட்டை 9ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்: என்.டி.ஏ-வுக்கு தேஜஸ்வி வலியுறுத்தல். பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீடு உள்ளிட்ட 75% இடஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
தி டெலிகிராப்:
* கையால் மலம் அள்ளும் தொழில்: ஜாதியப் பாகுபாட்டை வெளிப்படுத்தும் தொழிலாளர்களின் அவலநிலை. பல மாநிலங்களில் பள்ளியில் பாகுபாடு, மறுவாழ்வு இல்லாமை தொடர்வதாகவும், 63 மாவட்டங்களில் இன்னும் உலர் கழிப்பறைகள் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
– குடந்தை கருணா
