உணவுப் பாக்கெட்டுகளில் ஊசி பயன்படுத்தக் கூடாது! உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

புதுடில்லி, ஜூன் 14- உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களை பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

செய்தித்தாளில் உள்ள அச்சுமையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. எனவே உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டக்கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஅய்) சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து எப்எஸ்எஸ்ஏஅய் 12.6.2026 அன்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: உணவுப் பொருட்கள் மற்றும் அலங்காரக் கேக்குகளில் மறைந்திருக்கும் உலோக ஊசிகளை பொதுமக்கள் விழுங்கிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால் அவர்களின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

எனவே உணவுப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட கேக்குகள், கேக் பெட்டிகள், இனிப்புப் பெட்டிகள், தின்பண்டப் பொட்டலங்கள், உணவுப் பார்சல்கள், உணவுப் பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களைக் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணயச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எப்எஸ்எஸ்ஏஅய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *