மும்பை, ஜூன் 11- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா திரா விடர் எழுச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது, ஜூன் 6-ஆம் தேதி மாலை 7-00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் சிறப்புடன் தொடங்கியது.
மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இ.அந்தோணி அனைவரையும் வர வேற்று பேசினார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன் தொடக்க உரையுடன் நெறியாள்கை செய்தார். மும்பை மாநகர திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் அன்பழகன் பொற்கோ, மும்பை புறநகர் மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், கழகப் பொருளாளர் பெரியார் பாலா, மகிழ்ச்சி மகளிர் பேரவை சார்ந்த ந.வளர்மதி, காரை இரவீந் திரன், திருவள்ளுவர் நற்பணி இயக்க ந.இராதாகிருஷ்ணன், ஜெய் பீம் அறக்கட்டளை வனிதா இளங்கோவன், அக்சித் இரவிசந்தி ரன், கே.பி. சண்முகவேல், மனிதநேய சங்கர் திராவிடர், ஆகியோர் கலைஞ ரின் பொது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சிறப்பாக நினைவு கூர்ந்தும் பேசினர்
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி யஷ்வந்த் சவாரே கலந்துகொண்டு பெரியார், அம்பேத்கர், கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பற்றியும் நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் பலவற்றையும் சிறப்பாக தனது உரையில் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினருக்கு கழகத்தின் சார்பில் பயனடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது!
முலூண்ட் ஆ. பாலசுப்பிர மணியம், திராவிடர் கழக தாராவி கிளைத் தலைவர் அய்.செல்வ ராஜ், மூத்த திமுக தலைவர் என்.வி. சண்முகராசன், பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் அ.அறச்செல்வன், திமுக தோழர் பொய்சர் மூர்த்தி, பூ.சு.அழகுராஜா சி.குப்புசாமி, க.அறிவுமதி, பிரேம்குமார், விக்ரம், சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மும்பை திராவிடர் கழகச் செயலா ளர் ஜே. வில்சன் நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது!
