தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்த தீர்மானம்

0 Min Read

தென்சென்னை, மே 21– தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 19.05.2026 அன்று மாலை 6 மணியளவில் இளைஞரணி துணைச்செயலாளர் மாரிமுத்து உணவகத்தில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில் மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய களச்சூழல், அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

மாதம் ஒரு தெருமுனை பிரச் சாரக் கூட்டம் நடத்துவது.

சுவர் விளம்பரம் செய்வது.

மாதம் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *