வெறுப்பு அரசியல் வேகம் எடுக்கிறது! எஸ்.அய்.ஆர். மூலம் நீக்கப்பட்டவர்கள் அரசு நலத் திட்டங்களைப் பெற முடியாது மேற்கு வங்கம், பீகார் மாநில அரசுகள் அறிவிப்பு

2 Min Read

கொல்கத்தா, மே 15 மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு கடந்த சனிக்கிழமை பதவியேற்றது. இந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த 1.5.2025 அன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச் சர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “அரசின் அனைத்து சமூக நலத்திட்டங்களும் – அவை 10 ஆண்டுக்கு முன் அல்லது 30 ஆண்டுக்கு முன் தொடங்கப் பட்டவையாக இருந்தாலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். எனினும், இறந்தவர்கள், சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் அல்லது இந்தியர் அல்லாத எவரும் மேற்கு வங்க மக்களுக்கான நலத் திட்டங்களை பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.

இந்நிலையில் எஸ்அய்ஆர் நட வடிக்கையின் கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. எனினும் எஸ்அய்ஆர் நடவடிக்கையில் பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக தீர்ப்பாயத்தில் முறையீடு செய்த வர்களுக்கு அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை நலத் திட்ட உதவி தொடரும். அதன் பின் அடுத்தகட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் தெரி வித்துள்ளது. மேற்கு வங்க உணவு வழங்கல் துறை அமைச்சர் அசோக் கீர்த்தனியா கூறுகை யில் “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் அனைத்து அரசுத் திட்டங்களையும் பெறலாம். ரேசன் அட்டைகள் சரி பார்க்கப்படும்” என்றார்.

பீகாரில்…

இதுபோல் பீகார் தலைநகர் பாட்னாவில், முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில் “பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ரேசன் பொருட்கள், பிற நலத்திட்டங்கள் உட்பட எந்தவொரு அரசுச் சலுகையையும் பெற முடியாது. இவர்களின் வங்கி பணப்பரிமாற்ற புத்தகங்களும் உரிய காலத்தில் ரத்து செய்யப்படும்” என்றார்.

பீகார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரி கூறுகையில், “மாநி லத்தில் எஸ்அய்ஆர் நடவடிக்கைக்கு பிறகு, ரேசன் அட்டைதாரர்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *