நியூயார்க், பிப். 19- வேற்றுக் கோள்களில் உயிரினங்கள் இருப்ப தற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்ட தற்கான எந்த ஓர் ஆதாரத்தையும் நான் பார்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளார்.
முன்பொருமுறை, இணையதள நிகழ்ச்சி ஒன்றில், வேறு கோள்களில் உயிரினங்கள் உண்மையாகவே இருக் கிறார்களா என்ற கேள்விக்கு, ‘ஆமாம், அவா்கள் உண்மையானவா்கள்’ என்று ஒபாமா பதிலளித்தது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இதைத் தொடா்ந்து, ஒபாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்த விரிவான விளக்கத்தில், ‘இந்தப் பிரபஞ்சம் கற்பனையில்கூட அளவிட முடியாத அளவுக்கு பரந்து விரிந்தது. எனவே, எங்கோ ஓா் இடத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். தூரமும் மிக அதிகம் என்பதால், அங்கு வாழும் உயிரினங்கள் நம்மைத் தேடி வந்திருக்க வாய்ப்பில்லை.
நான் அதிபராக இருந்த காலகட்டத்தில், பிறகோள் உயிரினங்கள் நம்மைத் தொடா்பு கொண்டதற்கான எந்தவொரு ரகசிய ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் ‘ஏரியா 51’ எனும் ரகசிய இடத்தில், பிறகோள் உயிரினங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பல ஆண்டுகளாக நிலவி வரும் வதந்திகளையும் ஒபாமா மறுத்துள்ளார்.
