ஜம்மு -காஷ்மீருக்கு மாநிலத் தகுதி விவகாரம்: ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது!

1 Min Read

புதுடில்லி, ஆக.15 ஜம்மு -காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின்போது ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி  வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தன. இருப்பினும் தேர்தல் முடிந்து ஓராண்டாகும் நிலையில், மாநிலத் தகுதி  வழங்கவில்லை. இந்நிலையில் மாநிலத் தகுதி  வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று (14.8.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, ஜம்மு – காஷ்மீரின் நிலைமையை கவ னிக்காமல் விட முடியாது என கருத்து தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் சார்பில் ஆஜ ரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தகுதி  வழங்கப்படும்’ என்று ஒன்றிய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், இப்போது ஏன் இந்த விவ காரம் இவ்வளவு பரபரப்பாக எழுப்பப்படு கிறது? இந்த விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்களை பெறுவதற்காக 8 வாரங்கள் அவகாசம் வேண்டும்’ என்றார். இந்தக் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டு, ஒன்றிய அரசு, இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு கூறி வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *