மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்

viduthalai
1 Min Read

திருமங்கலம், ஜூன் 25 மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பிலும், மாநகர் மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி அன்பளிப்பிலும் 22.6.2025 அன்று மாலை 5 மணி அளவில், மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல் லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, ‘கடவுளை மற! மனிதனை நினை’ என்ற வாசகத்துடன் தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பா.முத் துக்கருப்பன் தலைமை ஏற்றார், மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் ச.அறிவுச்செல்வி வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட தலைவர் த. ம. எரிமலை ஒருங்கிணைத்தார். மாநகர் மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி நோட்டுக்களை வழங்கி சிறப்பித்தவர். வீரராகவன் தங்கதுரை மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், மு. சண் முகசுந்தரம் திருமங்கலம் நகர தலைவர், இரா.கலைச் செல்வி மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர்,ஏ. பி. சாமிநாதன் இளைஞரணி தலைவர், போ. காவேரி மகளிர் பாசறை செயலா ளர், கார்த்திகா மகளிர் பாசறை ஆகியோர் கருத்துரையாற்றினார். திராவிட மாணவர் கழக தலைவர் ச.அறிவுப்பாண்டி நன்றியுரையாற்றினார். 50க்கும் மேற்பட்ட இருபால் மாணவர்கள் பெரியாரின் படங்களிட்ட நோட்டுகளை பெற்றதோடு, அவரின் கருத்துகளை தெரிந்துகொண்டு மிக மகிழ்ச்சியாக சென்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *