புதுடில்லி, ஜூன் 6– காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டில் இருசக்கர வாக னங்கள் விற்பனை 17 சதவீதமாகவும், கார் விற்பனை 8.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மேலும் செல்போன் விற்பனை 7 சதவீதமாக சரிந்துள்ளது.
மறுபுறம் செலவுகள் மற்றும் கடன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, கல்வி கட்டணம், உள் நாட்டு பணவீக்கம் உள்பட கிட்டதட்ட எல்லாமே விலை உயர்ந்துவிட்டன. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு சாமானிய இந்தியரும் அனுபவித்து வரும் பொருளாதார அழுத்தம். பிரமாண்ட நிகழ்வுகளை காட்டிலும் அன்றாட காட்சிகளின் எதார்த்தத்தில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகளுக்கு அல்ல, சாமானி யருக்கான பொருளாதாரத்தை அரசு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.