இதுதான் பி.ஜே.பி.யின் ஒழுக்கம்! கட்சி அலுவலகத்தில் பெண் தொண்டரிடம் தவறாக நடந்த பாஜக பிரமுகர்!

1 Min Read

கோண்டா, மே 26 உத்தரப்பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் பெண் தொண்டரிடம் தவறாக நடந்து கொண்ட காட்சிப் பதிவு வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த சம்பவம், ஏப்ரல் 12 ஆம் தேதி கோண்டா நகரில் நடந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளின்படி, பாஜக கோண்டா மாவட்டத் தலைவர் அமர் கிஷோர் காஷ்யப், கட்சி தலைமையகத்தின் படிகளில் நின்று கொண்டு ஒரு பெண் தொண்டரிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

இந்தக் காட்சிப்பதிவு காட்சிகளின் அடிப்படையில் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவர் தலைமைக்குப் புகார் அளித்துள்ளார். இதற்குக் காஷ்யப் இடம் விளக்கம் கேட்டு மாநில கட்சித் தலைமை தாக்கீது அனுப்பியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *