புதுடில்லி, மே 13- கோடை விடுமுறையில் (Summer) மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா (Tour) சென்று வருகின்றனர். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் விசா (Visa) போன்ற சிக்கல்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவிலிருந்து பயணிகள் இப்போது விசா இல்லாமல் 58 நாடுகளுக்கு பயணிக்க முடியும். இது இந்தியாவிலிருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான இடங்களின் பட்டியலில் தாய்லாந்து, இந்தோனேசியா, மொரிஷியஸ் மற்றும் மாலத்தீவுகள் அடங்கும். இந்தப் பட்டியலில் பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற கலாச்சார ரீதியாக வளமான இடங்களும் அடங்கும்.
இந்தியர்கள் விசா இல்லாமல் மற்றும் முன்கூட்டியே விசா பெறாமல் (Visa On Arrival) பயணம் செய்வதன் நன்மை என்னவென்றால், விசாக்களுக்குச் செலவிடும் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். குறைந்த பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கு இந்த நாடுகள் சிறந்த தேர்வாகும். இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செல்லக்கூடிய அந்த நாடுகள் விவரம்.
எந்தெந்த நாடுகளில் பயணிக்கலாம்?
அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமரோஸ் தீவுகள், குக் தீவுகள், ஜிபூட்டி, டொமினிகா, எத்தியோப்பியா, பிஜி, கிரெனடா, கினியா-பிசாவ், ஜமைக்கா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், மொரிஷியஸ், மைக்ரோனேஷியா, மங்கோலியா, மொன்செராட், மொசாம்பிக், மியான்மர், நமீபியா, நேபாளம், நியு, பலாவ் தீவுகள், கத்தார், ருவாண்டா, சமோவா, செனகல், சீஷெல்ஸ், சோலெகல் செயின்ட், செசெல்ஸ், சோலிகல், செயின்ட், ஸ்கிட்ஸ் மற்றும் நாடுகள் கிரெனடைன்ஸ், தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துவாலு, வனுவாட்டு மற்றும் ஜிம்பாப்வே.
தாய்லாந்து
இந்தியர்கள் அதிகம் பார்வையிட விரும்பும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. கடற்கரைகள், இரவு வாழ்க்கை, பார்ட்டி, இயற்கை அழகு மற்றும் உணவு வகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ள இடம். மிகக் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு சென்று வர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தின் பட்டாயா மற்றும் ஃபூகெட், அவற்றின் கடற்கரை பகுதிகள் மற்றும் பார்ட்டிகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்த நாட்டின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்று சுற்றுலா. எனவே, பல நாடுகளுக்கு விசா விலக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு தாய்லாந்திற்குள் நுழைய விசா வழங்கப்பட்டது. இருப்பினும், விசா இல்லாமல் பயணிக்க தற்போது அனுமதிக்கப்படுகிறது.
கின்னஸ் சாதனை முயற்சி
பள்ளி மாணவிக்குப் பாராட்டு!
பள்ளி மாணவிக்குப் பாராட்டு!
திருச்சி, மே 13- திருச்சி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் மோகன் – பிரகதா இணையரின் மகள் 17 வயது மோ.பி.சுகித்தா. இவர் தமிழரின் தற்காப்பு கலையான சிலம்பத்தில் பல்வேறு சாதனைகள் செய்து மாவட்ட, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு சிலம்ப போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து வருகின்றார்.
இதில் அடுத்த கட்டமாக நேற்று (12.5.2025) சிலம்பத்தில் சாதனை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக ஒரு நிமிடத்தில் கால்களுக்குக் கீழே 72 முறை சிலம்பம் சுற்றி சாதனைப் படைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த கின்னஸ் சாதனை முயற்சியானது பயிற்சி பெற்ற சிலம்ப நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிலம்ப மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த சாதனை முயற்சியை கின்னஸ் சாதனைப் புத்தகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக மாணவி சுகித்தாவின் தந்தை மோகன் அவர்கள் தெரிவித்தார்.
சாதனை முயற்சி வெற்றி பெற்று திருச்சிக்கு மேலும் பெருமைகளை மாணவி சுகித்தா சேர்ப்பார் என வரகனேரி என்.கே.ரவிச்சந்திரன், குருச்சரண், கலைக்காவேரி பேராசிரியர் சதீஷ்குமார், மேலகல்கண்டார் கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த கின்னஸ் உலக சாதனை முயற்சி திருச்சி தந்தை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்றது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
சட்ட திருத்தம் பற்றி அதிகாரிகள் தகவல்
சட்ட திருத்தம் பற்றி அதிகாரிகள் தகவல்
புதுடில்லி, மே 13- மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1881. 1931 ஆகிய ஆண்டுகளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தற்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்ட திருத்தம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 1948ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம், கடைசியாக 1994ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதில், மீண்டும் திருத்தம் செய்யத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிவத்தில் குறிப்பிட்ட கேள்விகளை பொதுமக்களிடம் கேட்க அந்த சட்டம் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாக அவர்கள் கூறினர்.