அமெரிக்காவில் கொள்ளையைத் தடுக்க முயன்ற இந்திய வம்சாவளிப்பெண் சுட்டுக்கொலை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நியூயார்க், மே 27- அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட பெண் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மேக்னாபென் படேல்(47) என அடை யாளம் காணப் பட்டார். இவர் கடந்த பத்து ஆண்டு களாக அந்த பல்பொருள் அங் காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். பல்பொருள் அங்காடியில் கொள்ளை முயற்சியை தடுக்கும் போது இந்தியப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குஜராத்தின் மெஹ் சானா மாவட்டத்தைச் சேர்ந்த அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 26 வினாடிகளுக்குள் அரங் கேறிய இந்தச் சம்பவம் முழுவதுமே, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

சுட்டுக்கொலை

சிசிடிவி காட்சிகளின் படி, முகமூடி அணிந்த ஒரு நபர் கடைக்குள் நுழைந்தார். அவர் சிறிது நேரம் சுற்றும் முற்றும் பார்த்த பிறகு, தனது இடுப்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து, மிக அருகில் நின்று மேக்னாவை நோக்கிச் சுட்டார். பல முறை சுட்ட பிறகு, அந்தத் தாக்குதல் நடத்திய நபர் சில வினாடிகளிலேயே அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

மேக்னா கடைக்குள் ளேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப் பகுதியைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்தக் கொலைக்கான உண்மையான நோக்கத் தைக் கண்டறியும் பொருட்டு, புலனாய்வு அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி வரு கின்றனர். முதற்கட்ட விசாரணையில், இது ஒரு கொள்ளை முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது; இருப்பினும், தனிப் பட்ட விரோதம் அல்லது திட்டமிட்ட தாக்குதல் போன்ற பிற கோணங் களையும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *