பேருந்துகளில் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் கேமராக்கள் சட்டப் பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

2 Min Read

சென்னை, ஏப்.24 தமிழ்நாட்டில் 4 ஆயிரம் பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்  நேற்று (23.4.2025) போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் இதுவரை 675 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். இதற்கான நிதியாக வரும் ஆண்டில் ரூ.3,600 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் 3,378 புதிய பேருந்து வாங்கப்பட் டுள்ளன.இன்னும், 8,123 பேருந்துகள் பல்வேறு திட்டங்களின் மூலமாக வாங்கப்பட இருக்கின்றன. தனியார் ஒப்பந்த முறையிலான மினி பேருந்துகள் அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப் படும் என்றார்.

பின்னர் அவர் வெளி யிட்ட அறிவிப்புகள் விவரம்: அரசு நிதியுதவி மூலம் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கு விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ.642 கோடி வழங்கி தீர்வு காணப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 50 பேருந்து பணி மனைகள் ரூ.75 கோடியில் புதுப்பிக் கப்படும். மேலும், 4,000 பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையி லான வெளிப்புற கேமராக்கள் பொருத் தப்படும்.

சாலைப் பாதுகாப்பை மேம் படுத்துவதற்காக 500 பேருந்துகளில் ரூ.2 கோடியில் ஒட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும். சென்னையில் அயனாவரம் உட்பட 6 பேருந்து முனையங்கள் ரூ.7.5 கோடியில் மேம்படுத்தப்படும். அதனுடன் 100 பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்ய தேவையான நவீன இயந்திரங்கள், கருவிகள் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். மேலும், 100 பணிமனைகளில் பணியா ளர்கள் பயன் பாட்டு ஒப்பனை அறைகள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப் படும்.

அதேபோல், சிறீ பெரும்புதூர் வட் டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒட்டுநர் தேர்வுத் தளத்துடன்கூடிய கட்டடம் ரூ.7.27 கோடியில் கட்டப்படும். தமிழ்நாட்டில் உள்ள 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மாதிரி போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படும். போக்குவரத்து ஆணையரகத்தில் ரூ.50 லட்சம் மதிப் பில் நூலகம் அமைக்கப்படும்.

திறன்மிகு ஓட்டுநர்களை உரு வாக்கும் நோக்கத்தில் சேலம் தேவண்ணகவுண்டனூரில் ரூ.17.25 கோடியில் ஒட்டுநர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும். மேலும், சாலை விபத்துகளை தடுப்ப தற்காக 2025-2026-ஆம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு நிதியானது ரூ.130 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு 22 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *