புதுச்சேரி, மார்ச்26- கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அய்ந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதி யாக ஒன்றிய அரசு ஒதுக்கி யிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கடும் சேதங்களை ஏற்படுத்திய ஃபெஞ்சால் புயல் நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய் யப்படவில்லை.
அதுபோல, வய நாடு நிலச்சரிவால் பாதிக் கப்பட்ட கேரளத்துக்கும் கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடை பெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆறு மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது இயற் கைப் பேரிடரால் பாதிக்கப் பட்ட ஆந்திரம், ஒடிசா, தெலங்கானா, நாகாலாந்து, திரிபுரா, மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி பேரிடர் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளி யாகியிருக்கிறது.
இது குறித்து அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ஒன்றிய அமைச் சரவையின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கூடுதல் ஒன்றிய அரசின் உத வியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஆந்திரம், நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு 1554.99 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது ஏற்கெனவே ரூ. 18,322.80 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய நிலையில், இது கூடுதல் நிதியாகும் என்று பதிவிட்டுள்ளார்.