கல்வியில் அரசியலாம் ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்

1 Min Read

சென்னை, மார்ச் 12- கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தார்

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் 10.3.2025 அன்று வெளியிட்ட பதிவு:

நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் பேசியதற்கு, பதிலளித்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டிக்கிறோம். என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பேச சொல்வதைப் பேசுகிறாரா? கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். மாணவா்களும், ஆசிரியா்களும் இந்த துரோகத்தை மறக்க மாட்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் நடத்தும் போராட்டம் கல்விக்கானது. மாநில மக்களின் உரிமைக்கானது. அது வெல்லும். எங்களைப் பொறுத்தவரை அது ஆா்எஸ்எஸ் கல்விக் கொள்கை. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று அதில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *