ஊற்றங்கரையில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘‘பெரியார் எனும் பெரு நெருப்பு’’ சிறப்பு கருத்தரங்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஊற்றங்கரை, பிப். 16- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பெரியார் எனும் பெரு நெருப்பு” எனும் சிறப்பு கருத்தரங் கம் 11/02/2025 அன்று காலை 10 மணியளவில் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட இணை செயலாளர் சீனிமுத்து.இராஜேசன் வரவேற்புரை நிகழ்த்த சட்டக் கல்லூரி மாணவி பெ.விண்ணரசி தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார். கிருட்டிணகிரி மாவட்ட கழக செயலாளர் செ.பொன்முடி தலைமை தாங்கினார்.

கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி, அரூர் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ் செல்வன் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் பழ.வெங்கடாசலம் திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலை வர் கே.சி.எழிலரசன் ஆகியோர் உணர்வுபூர்வமான உரையை நிகழ்த் தினர். கவிஞர் இ.சாகுல் அமீது சிறப் புரையாற்றினார்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் மாதாந்திர புரவலராக இணைத்துக் கொண்ட தணிக்கையாளர் லோகநாதன் சேகர் “இந்தியா அன்றும் –இன்றும்” என்கிற நூலை எழுதிய எழுத்தாளர் நாராயணசாமி நிகழ்வில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அரூர் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ் செல்வன் ஆகியோருக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் சிறப்பு செய்தார்.

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க ஊற்றங்கரை ஒன்றிய கழக செயலாளர் செ.சிவராஜ் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.பங்கேற்ற அனைவரும் தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டம் இது போன்ற கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *