மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம்!
சென்னை, ஜன. 12- நடப்பாண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் (10.1.2025) சட்டமன்ற 5ஆவது நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதில் அளித்தனர். .
உரிமை இல்லை
இந்த நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தப்போவது இல்லை. ஆகவே மாநில அரசு அதனை நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கே அதிகாரம் உள்ளது. பீகாரில் மாநில அரசு ஆய்வு நடத்தினார்கள். அதன் நிலை என்ன ஆனது?
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த
மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை
இருப்பினும் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறினார்.