ஜெயங்கொண்டம், செப்.9- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் நாள் விழா முதல்வர் தலைமையில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சா.இளங்கோவன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
இவ்விழாவில் மாணவர்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர்கள் ஆற்றும் பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர். மேலும், நடனம் நாடகம், பாடல், கவிதை ஆசிரியர் களைப் பற்றி உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் ஆசிரியர்களை மகிழ்வித்தனர்.
02.09.2026 அன்று பெரியார் கல்விக் குழுமத்தின் சார்பாக ஆசிரியர்களுக்கு நல்லா சிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியை கே.கிரிஜாவுக்கும் விருது வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் மற்றும் பெரியார் பள்ளியின் முதல்வர் அவர்களும் அவ்விருதினை ஆசிரியர் நாளன்று (5.9.2026) இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் முன்னிலையில் வழங்கி சிறப்பித்தார்.
விருது பெற்ற ஆசிரியை நன்றியுரையில் தன்னுடைய ஆசிரியர்களைத் தரம் உயர்த்தி அழகு பார்ப்பதில் பெரியார் கல்வி நிறுவனம் தன்னிகரில்லாமல் விளங்குகிறது என்பதை பெருமிதத் துடன் கூறினார்.
இந்த விருது தமது பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் மட்டு மல்லாமல், மேலும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கான ஊக்கமாகவும், பொறுப்பாகவும் கருதுவதாக கூறினார்.
கல்விப் பணியை சிறப்பாக ஆற்றுவதற்கு வாய்ப்பளித்த பெரியார் கல்வி நிறுவனத்திற்கும் தன்னை வழி நடத்திய பெரியார் பள்ளியின் முதல்வர் அவர்களுக்கும் இருபால் ஆசிரியர்களுக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
