‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்​கள் மீதான வழக்குகள் ரத்து

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப் 2-  நீட் எதிர்ப்புப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​கள் மீதான வழக்கை சிறப்பு அதி​காரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்​து, டில்​லி​யில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி திட்​ட​மிட்​டிருந்த பேரணியை கை விடு​வ​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது. கடந்த ஜூலை மாதம் போராட்​டங்​களில் ஈடுபட்ட மாணவர்​கள் மீது பல்​வேறு காவல் நிலை​யங்​களில் எப்​அய்ஆர் பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதிமன்​றம் மாணவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​களை ரத்து செய்​யு​மாறு மத்​திய, மாநில அரசுகளுக்கு அறி​வுறுத்​தி​யது. இதனையடுத்து ஒன்றிய அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு புதிய மனு தாக்​கல் செய்யப்பட்டது. அதில் மாணவர்​களின் எதிர்காலத்​தைக் கருத்​தில் கொண்​டு, உச்ச நீதி​மன்​றம் தனது தனிப்​பட்ட சிறப்பு அதி​கார​மான அரசி​யலமைப்புச் சட்டப் பிரிவு 142-அய் பயன்​படுத்​தி, மாணவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்​டுள்ள அனைத்து எப்​அய்ஆர் களை​யும் ரத்து செய்ய வேண்​டும் என கோரிக்கை வைத்​திருந்​தது.

இந்த மனு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி மற்​றும் வி. மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், டில்​லி, பிகார், மகா​ராட்டிரா, மேற்கு வங்​கம் மற்​றும் அசாம் ஆகிய மாநிலங்​களில் ஜூலை 20 முதல் 25 வரை நடை​பெற்ற போராட்​டங்​கள் தொடர்​பாகப் பதிவு செய்​யப்​பட்ட  எப்அய்ஆர் அனைத்​தும் அரசி​யலமைப்புச் சட்டப் பிரிவு 142-அய் பயன்படுத்தி ரத்து செய்​யப்​படு​வ​தாக உத்​தர​விட்​டனர்.

மேலும், பிற மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் பதிவு செய்​யப்​பட்ட இதே​போன்ற எப்​அய்ஆர்​கள் மீதும் மேற்​கொண்டு எந்த விசா​ரணை​யும் நடத்​தக் கூடாது என்​றும், இந்த போராட்​டங்​கள் தொடர்​பாக புதிய எப்அய்ஆர்​களைப் பதிவு செய்யத் தடை விதித்​தும் உத்​தர​விட்​டனர். அதே​நேரம் தீவிரக் குற்​றங்​களில் ஈடு​பட்ட 2,873 நபர்​கள் மீது டில்லி காவல் துறை ஒரே புதிய எப்அய்ஆர் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனு​மதி அளித்​தனர்.

மேலும், நீட் 2026 தேர்வு குளறு​படி​யால் தற்​கொலை செய்​து​கொண்ட மாணவர்​களின் குடும்​பங்​களுக்கு இழப்​பீடு வழங்க அகில இந்​திய அளவி​லான கொள்​கையை மாநில அரசுகளு​டன் கலந்​தாலோ​சித்து ஒன்றிய அரசு 3 மாதங்​களுக்​குள் உரு​வாக்க வேண்​டும் என்​றும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். அதேவேளை​யில் இந்த உத்​தர​வானது சிறப்​புச் சூழலைக் கருத்​தில் கொண்டு பிரிவு 142-இன் கீழ் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தால், இதனை எதிர்​கால வழக்​கு​களில் முன்​மா​திரி​யாகப் பயன்​படுத்த முடி​யாது என்​றும் நீதிப​தி​கள் தெளிவுபடுத்​தினர்.

செப்.5 டில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி

அப்​போது, சிஜேபி சார்​பில் அதன் இணை ஒருங்​கிணைப்​பாளர் சவுரவ் தாஸ் ஆஜராகி, உச்சநீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவு மற்​றும் ஒன்றிய அரசின் உறு​தி​மொழியை ஏற்று செப்​டம்​பர் 5 ஆம் தேதி டில்​லி​யில் நடத்​தத் திட்​ட​மிட்​டிருந்த அமை​திப் பேரணி​யைத் திரும்​பப் பெறு​வ​தாகக் தெரி​வித்​தார். அதற்கு தலைமை நீதிப​தி, “இரு தரப்​பின் இந்த இணக்​க​மான முடிவை வரவேற்​கிறோம். இருதரப்​பும் இணைந்து செயல்​பட்​டால்​ எந்​தவொரு சிக்​கலான பிரச்​சினைக்​கும்​ தீர்​வு காண முடி​யும்​” என குறிப்​பிட்​டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *