ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவி தன்னைத் தேடி வர வேண்டி ஒருவர் நரபலி கொடுத்த பகீர் நிகழ்வு நடந்துள்ளது. இதற்காக ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரைக் கொன்று, அவரது தலையை பூஜை அறையில் புதைத்து வழிபட்டுள்ளார். உடலை ஆற்றில் வீசியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த மனைவியை மீண்டும் அடைய இந்தக் கொடூர செயலை செய்துள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சிரிக்கத் தானே வேண்டும்!
‘‘1961–ஆம் ஆண்டு ஏற்பட்ட காவிரி வெள்ளப் பெருக்கின் போது புதைந்து போன 1008 சிவலிங்கங்களை மீட்க வேண்டும்’’ என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தி உள்ளார். இதை நினைத்தால் வயிறு முட்ட சிரிப்புதான் வருகிறது தன்னையே காத்துக் கொள்ள முடியாத சிவலிங்கங்களை மனிதர்கள் தான் காப்பாற்ற வேண்டுமா மனிதனை கடவுள் காப்பாற்றாத கடவுளை மனிதன்தான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னால் குடியரசு தலைவர் சொல்லி இருப்பதை நினைத்தால் வயிறு முட்ட சிரிக்க தானே வேண்டும்.
