புதுவை, ஆக.9 புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 15 பேர் மயக்கமடைந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அணிவகுப்பின்போது வெய்யி லால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (9.8.2026) புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
புதுவை காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீ கரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழாவில் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.
அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அமைச்சர் அமித்ஷா வுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
புதுவையில் அரசியல் தலை வர்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா தேசி யக்கொடி பேரணியைத் தொடங்கி வைக்கிறார்.
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி புதுச்சேரியில் டிரோன் பறக்கத்தடை, போக்கு வரத்தில் மாற்றம், பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.
மயக்கம்
புதுச்சேரியில் காவல்துறை அணி வகுப்பின் போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 15 பேர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
