கடந்த 1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி உலகம் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. அன்று உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியது. அடுத்து 3 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகசாகி மீதும் இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. இந்த சோக நிகழ்வின் 81ஆவது நினைவு நாள், ஜப்பானில் உள்ள அமைதிப் பூங்காவில் 9.8.2026 அன்று உணர்வுப்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
நினைவுக் கூட்டத்தில் மேயர் ஷிரோ சுசுகி, ஈரான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் என 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சரியாக காலை 11.02 மணிக்கு அமைதி மணி ஒலிக்கப்பட்டு,ஒரு நிமிடம் மவுனம் கடைப்பிடித்து மரியாதை செலுத்தப்பட்டது.
