குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி விழிப்புணர்வுப் பிரச்சாரம்

1 Min Read

நாகர்கோயில், ஆக.9- தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தந்தை பெரியார் எழுதிய சமூக நீதி சிந்தனைகள் அடங்கிய நூல்கள் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங் கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலா ளர் கோ. வெற்றிவேந்தன் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக் சாண்டர், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், கிள்ளியூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் பி.கலைச்செல்வன், கோட்டார் பகுதி கழத் தலைவர் ச.ச.மணிமேகலை, இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னூராஜன், நாகர்கோயில் மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, கன்னியாகுமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், வடசேரி பகுதி தலைவர் முத்து வைரவன், துணைச் செயலர் சி.அய்சக் நியூட்டன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *