தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கருநாடகத்துக்கு உத்தரவு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 31 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கருநாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விட கருநாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கருநாடகத்தில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாகக் கூறி, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விட இயலாது என கர்நாடக அரசு கூறியது.

இருப்பினும், கருநாடக அரசின் கூற்றை ஏற்க மறுத்து, ஜூலை 29 முதல் 15 நாள்களுக்கு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கருநாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. ஆனால், காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு – கருநாடகம் இடையேயான காவிரி நீர்ப் பிரச்சினை குறித்து டில்லியில் நேற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்து விட கருநாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *