மத்தியபிரதேசத்தில் 200 கிளிகள் இறந்து கிடந்தன பறவை காய்ச்சல் பாதிப்பா?

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கார்கோன், ஜன. 03- மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பத்வா பகுதியில் நர்மதா நதிக் கரையின் மேம்பாலத்தில் 200 கிளிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கிளிகள் இறக்கவில்லை என்பது பறவைகளின் உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கிளிகளின் உடற்கூராய்வை மேற்கொண்ட டாக்டர் மனிஷா சவுகான் கூறுகையில், “கிளிகளின் உடலில் அரிசி மற்றும் கூழாங்கற்கள் இருந்தன. உணவில் ஏற்பட்ட விஷத்தன்மையே இறப்புக்கு காரணம். ”மருந்து தெளிக்கப்பட்ட வயல்களில் பயிர்களை மேய்ந்ததாலும், நர்மதா நதி நீரை குடித்ததாலும் கிளிகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,” என்றார்.

அதுபோல, புத்தாண்டு அன்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மனிதக்கழிவு கலந்த நீரைக்குடித்ததால் வாந்திபேதி ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *