மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டம்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 7  உலகம் முழுவதும் உள்ள தனது பணியாளர்களில் சுமார் 2 சதவீதம் பேரைப் பாதிக்கும் வகையில், புதிய கட்ட பணிநீக்க நடவடிக்கையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு ஒரு பரந்த மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவு (Gaming Division) மிகப்பெரிய தாக்கத்தைச் சந்திக்கவுள்ளது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் உள்ள தனது பணியாளர்களில் சுமார் 7 சதவீதம் பேருக்கு (சுமார் 9,000 ஊழியர்கள்) விருப்ப ஓய்வு அல்லது பணி விலகல் திட்டங்களை மைக்ரோசாப்ட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போதைய மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் உலகம் முழுவதும் மேலும் 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *