“எதிர்நீச்சலில் வென்ற பெரியார்  80ஆம் ஆண்டு விழா’’ பெரியார் உலகம் நிதியளிப்பு திறந்தவெளி மாநாடு

1 Min Read

விருதுநகர் மாவட்ட கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!

27-06-2026 அன்று குற்றாலத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தென்மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி எதிர்வரும்
20-08-2026 அன்று ராஜபாளையம் நகரில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் – 80 ஆண்டு விழா’’ மற்றும் பெரியார் உலகம் நிதியளிப்பு திறந்தவெளி மாநாடு நடைபெற உள்ளது. எனவே மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் தோழர்கள் உடனடியாக அதற்கான பணிகளைத் தொடங்குவதுடன் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொலைநோக்கு திட்டமான “பெரியார் உலகம்” அமைவதற்கு நமது மாவட்டத்தில் பெருமளவில் நன்கொடை திரட்டி வழங்குவதுடன், திறந்தவெளி மாநாட்டினையும் சிறப்பாக நடத்திட உறுதி ஏற்க வேண்டுகிறேன்.

– இல.திருப்பதி

மாவட்ட கழகத் தலைவர்,
 விருதுநகர் மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *