பள்ளிகளில் புதிய பாடத்திட்டம்! கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்

1 Min Read

சென்னை, ஜூன் 29- பள்ளி களில் புதிய பாடத்திட்ட கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன. இதைப் பின்பற்றி துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்குமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (எஸ்சிஆர்டிஇ) உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக நடப்பு (2026-2027) கல்வியாண்டில் 1 முதல் 3ஆம் வகுப்பு களுக்கு முதல் பருவத்துக்கான புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இந்த வகுப்புகளில் ஆய்வு மேற் கொள்ளும் அனைத்து விதமான துறைசார்ந்த அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகிறது. அத்துடன் ஆசிரியர் பதிவேடு குறித்த விவரங்களும், பாடவாரியான ஆய்வுப் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன. கல்வி அலுவலர்கள் இந்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி, வகுப்பறை கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *