பழனி மாவட்டக் கழக அலுவலகம் திறப்பு சின்னாளப்பட்டி மாநாட்டிற்கு அழைப்பு

1 Min Read

பழனி, ஜூன் 21- பழனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தை திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் 19.6.2026 அன்று பகல் 2 மணிக்கு திறந்து வைத்தார்.

மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் வரவேற்றார். பழனி மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி. ஆனந்தகிருட்டிணன், மாவட்டச் செயலாளர் மாவட்ட இணைச் செயலாளர்  ஆ.இராமகி ருட்டிணன், பழனி ஒன்றியச் செயலாளர் சி.இராதாகிருட்டிணன், பழனி நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

26.6.2026 அன்று சின்னாளப்பட்டியில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்-80ஆம் ஆண்டு விழா, திறந்தவெளி மாநாடு” அழைப்பினை திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண் டியன் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *