காவு வாங்கும் ‘நீட்’ உயிரிழப்புக்கு முடிவு இல்லை ராஜஸ்தான், உத்தரகாண்டில் 2 பேர் தற்கொலை

2 Min Read

டேராடூன், ஜூன் 19 நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

‘நீட்’ தேர்வு

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் படேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரியா குமாரி (23). இவர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்விற்கு தீவிரமாக தயாராகி வந்தார். நேற்று முன்தினம் (16.6.2026) இரவு 10 மணி வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்த ரியா குமாரி, மறுநாள் (17.6.2026) காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது தாய் பலமுறை கதவைத் தட்டியும் எவ்வித பதிலும் கிடைக்காததால், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரியா குமாரி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட் டது. அவரது அறையிலிருந்து கைப்பற் றப்பட்ட தற்கொலை குறிப்பு கடிதத் தில், ‘நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்கிறேன். எனது குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன்’ என்று ரியா குமாரி குறிப்பிட்டிருந்தார். வினாத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக ஏற்ெகனவே ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை இவர் எழுதியிருந்தார். அவர் எதிர்பார்த்த அளவு தேர்வில் சாதிக்க முடிய வில்லையே என்ற கவலையில் அவர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் ஏற்ெகனவே மே மாதம் 15ஆம் தேதி பிரதீப் மஹிச் என்ற நீட் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், உமேஷ் (22) என்ற மாணவர் சிகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் மற்றும் இரண்டு உடன் பிறந்தவர்களுடன் வசித்து வந்தார். ஏற்ெகனவே நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில் மறுதேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (16.6.2026) தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உத்யோக் நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *