சென்னை – பெரியார் திடலில் தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் செயல்பாட்டு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது

அரசு மற்றும் அலுவலகப் பணிகளில் பணிநிறைவு பெற்ற அறிவார்ந்த மூத்தோர்கள் அங்கம் வகித்திடும் தமிழ்நாடு மூதறிஞர் குழு பொறுப்பாளர்களின் நிர்வாகக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை – பெரியார் திடலில் 10.06.2026 அன்று காலை 11.00 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி தலைமை வகித்தார்.

கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி பற்றிய குறிப்புகள் மற்றும் ஒளிப்படங்களை மூதறிஞர் குழுவின் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் அறிக்கையாக வாசித்து புரவலரிடம் வழங்கினார்.

மூதறிஞர் குழுவின் நிர்வாகக் குழுவினர், மூதறிஞர் குழுவின் உறுப்பினர்களை அதிகரித்திட அண்மை யில் பணிநிறைவு பெற்றோரை சந்திப் பதன் அவசியம் பற்றியும் மூத்த அறிஞர் பெருமக்களை குழுவில் உறுப்பினர் களாகச் சேர்த்திடுவது பற்றியும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.

மூதறிஞர் குழுவினர் புரவலர் தமிழர் தலைவர் அவர்கள் வருங்காலத்தில் நடத்தப்படவேண்டிய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை உள்ளடக்கிய வழி காட்டுதல் நெறியுரையினை ஆற்றினார்.

‘‘மூதறிஞர் குழு நடத்திடும் நிகழ்ச்சிகள், மக்களை நடைமுறையில் பாதிக்கும் கொள்கை சார்ந்த உயர்நிலை முடிவுகளைப் பற்றிய ஆய்வுரையாக நடத்தப்பட வேண்டும். சமுதாயத்திற்கு விளையும் நன்மை தீமைகளை முன்னோக்கி விளக்கிடும் வகையில் நடத்தப்படல் வேண்டும். உரிய தலைப்புகளில் உரையாற்றிட அந்தந்த தலைப்பில் ஆழ்ந்து அறிவு, அனுபவம் பெற்ற அறிஞர் பெருமக்களை அழைத்து உரையாற்றிடச் செய்தல் வேண்டும்’’ என புரவலர் தனது நெறியுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

அறிவியல் மனப்பான்மையினை மக்களிடம் பெருக்குகின்ற வகையில் நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்ட நிறைவில் தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் வருங்கால செயற்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

துணைத்தலைவர்கள் : நீதிபதி இரா. பரஞ்ஜோதி
வேண்மாள் நன்னன்
பால. பன்னீர்செல்வம்
 செயலாளர்கள் : ம. செல்வராஜ்
முனைவர் த.கு. திவாகரன்
பொருளாளர் : ஆ. வெங்கடேசன்
இணைச் செயலாளர்கள் : ந. ஜெயராஜ்
பொ. நாகராஜன்
செயற்குழு உறுப்பினர் : மு. இரா. மாணிக்கம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *