நாடு முழுவதும் புகையிலைக்கு ஏன் தடை விதிக்க கூடாது? ஒன்றிய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன்13- பெரும்பாலான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் புகையிலைப் பயன்பாட்டுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஆர். மணிபாரதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாட்டில் 13 முதல் 15 வயதுடைய பள்ளி மாணவர்களில் 8.5 சதவீதம் பேர் பல்வேறு வடிவங்களில் புகையிலையைப் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள கடைகளில் புகையிலை வகைகள் பெருமளவில் விற்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்று நோய்க் காரணி

குட்கா, பான் பராக், பான் மசாலா போன்ற மெல்லும் புகையிலை வகைகளில் 4,000-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந் தது 40 வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. மெல்லும் புகையிலை பயன்பாடு, பல்வேறு வகையான புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களுக்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.

மெல்லும் மற்றும் நுகரப்படும் புகையிலையில் ‘நிக்கோட்டின்’ வேதிப்பொருள் உள்ளது. இது வாய் அல்லது மூக்கின் திசுக்கள் வழியாக உறிஞ்சப்படுகிறது. இது பக்கவாதம், வாய் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் 2023 நவம்பர் முதல் 2024 செப்டம்பர் வரை காவல்துறையினர் நடத்திய சோதனையில் 12,336 கிலோ கூல்லிப் உள்பட 1 லட்சத்து 27,561 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட் களின் விற்பனையைத் தடுக்க உயர் நீதி மன்ற உத்தரவு அமல்படுத்தப் படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகளில் புகையிலை இல்லாத கல்வி நிறுவன வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த குழந்தை களுக்கான புகையிலை தடுப்பு மய்யம் அமைத்து உளவியலாளரை நியமிக்க வேண்டும்.

ஏன் தடை விதிக்கவில்லை

மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் குறைந்தது இரு முறையாவது வாய்வழி- பல் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பெருட்கள் விற்பனை தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசும், பெரும்பாலான மாநிலங்களில் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடை இருக்கும்போது நாடு முழுவதும் ஏன்தடை விதிக்கக் கூடாது என்பது தொடர்பாக ஒன்றிய அரசும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *