சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித் துள்ளார். ஊரக உள்ளாட்சிக ளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமம் உள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக, கனிமங் களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப் பது தொடர்பான சட்ட மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப் பட்டது. 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு களை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமிப்பது தொடர் பான சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்டது. இந்தநிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட 2 சட்ட மசோ தாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சி களுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமம் உள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரிடம் ஒப்பு தலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை அவர் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், 2 மசோதாக் களுக்கு இன்று (7.3.2025) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:ஆர்.என். ரவி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
