தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம் இ-ஸ்கூட்டர், இ-பஸ் தயாரிக்க முடிவு

2 Min Read

சென்னை, ஜூன் 12 தூத்துக்குடியில் ரூ.7,000 கோடியில் வின்பாஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இங்கு, இ-ஸ்கூட்டர், இ-பஸ் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வியட்நாமை சேர்ந்த முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த திமுக ஆட்சியில், தூத்துக்குடியில் 114 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலையை துவங்கியது. இதை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். உற்பத்தி தொடங்கிய சில மாதங்களிலேயே இந்த ஆலை 10 ஆயிரமாவது மின்சார காரை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

தற்போது மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தூத்துக்குடியில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் ரூ.7,000 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், வெறும் கார்களை மட்டுமே தயாரித்து வந்த இந்த ஆலை, இனி மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார பேருந்துகளையும் தயாரிக்கும் ஒரு மாபெரும் ஒருங்கிணைந்த உற்பத்தி மய்யமாக மாறவுள்ளது.

தூத்துக்குடி துறைமுக நகரில் அமைந்துள்ள தனது 408 ஏக்கர் உற்பத்தி வளாகத்தில், இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை இந்நிறுவனம் கோரியுள்ளது. இதுவரை மின்சார கார்களை மட்டுமே தயாரிப்பதற்கான ஆலையாக இருந்த வின்பாஸ்ட் இந்த புதிய விரிவாக்கத்தின் மூலம் கார்கள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பஸ்களை தயாரிக்கும் மய்யமாக மாறவுள்ளது.

இதன்மூலம் ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் மின்சார கார்கள், 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் என்ற அளவிற்கு உயர்த்தப்படவுள்ளது. ஏற்ெகனவே முதற்கட்டமாக ரூ.1,200 கோடி முதலீட்டில் 50,000 கார்கள் தயாரிக்கும் திறனுடன் இந்த ஆலை இயங்கி வரும் நிலையில், ஓராண்டிற்குள்ளாகவே இந்த அடுத்தகட்ட மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கான இ-பஸ்களின் தேவை கணிசமாக உயர்ந்து வருவதை அறுவடை செய்ய வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீடு, ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாட்டின் ஆதிக்கத்தை உலக அரங்கில் மேலும் உயர்த்தும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகன புரட்சி என்பது இருசக்கர வாகனங்கள் மூலமாகவே அடிமட்டத்தில் இருந்து வேகமெடுத்து வருகிறது. மொத்த மின்சார வாகன விற்பனையில் பாதிக்கும் மேல் இருசக்கர வாகனங்களே பிடிக்கின்றன. இதனை மனதில் கொண்டே வின்பாஸ்ட் தனது இ-ஸ்கூட்டர் தயாரிப்பை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *