புதுடில்லி, ஜூன் 10- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்த இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகிய 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக, தங்கள் பதவி யிலிருந்து விலகிய இந்த 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் சிபிஅய் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இவர்கள் நால்வரும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வழக்குரைஞர் சீனிவாசன் தொடர்ந்த இந்த வழக்கில், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இந்த 4 முன்னாள் எம்எல்ஏ-க்களும் தற்போது உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
