நாட்டின் அகல ரயில் பாதையில் 99.6 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது! ரயில்வே அமைச்சகம் தகவல்

புதுடில்லி, ஜூன் 10- இந்திய ரயில்வே அகல ரயில் பாதைகளை முழுமையாக மின்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் அகல ரயில் பாதையில் 99.6 சதவீதம் ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 70,271 கி.மீ. அகல ரயில் பாதையில் 2026 மே 31ஆம் தேதி நிலவரப்படி 70,002 கி.மீ. மின்மயமாக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் பாதை மின்மயமாக்கல் கடந்த 1925இல் தொடங்கியது. நாட்டின் முதல் மின்சார ரயில் 1,500 வோல்ட் டிசி அமைப்பில், மகாராட்டிராவின் மும்பை விக்டோரியா டெர்மினஸ் மற்றும் குர்லா ஹார்பர் இடையே இயக்கப்பட்டது.
ரயில்வே அமைச்சகத்தின் அண்மைத் தகவலின்படி, 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் அகல ரயில்பாதையில் 100 சதவீதம் மின்மயமாக்கலை எட்டியுள்ளன. ராஜஸ்தான், தமிழ்நாடு, அசாம், கருநாடகா, கோவா ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் 269 கி.மீ. வழித்தடம் மட்டுமே மின்மயமாக்கல் பணியின் கீழ் உள்ளன. இவை தவிர, புதிய பாதைகள் மற்றும் பல வழித்தட திட்டங்கள் அனைத்தும் தற்போது மின்மயமாக்கலுடன் சேர்த்தே அனுமதி அளிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *