சென்னையில் விரைவில் சிறிய ரக மின் பேருந்துகள் அறிமுகம்!

1 Min Read

சென்னை, ஜூன் 6– சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், நகரின் குறுகிய சாலைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் சிறிய ரக மின்சாரப் பேருந்துகளை (மினி இ-பஸ்) விரைவில் அறிமுகப்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

இந்த சிறிய ரக மின்சார பேருந்துகள் ஒரு முறை முழுமையாக மின்னேற்றம் செய்தால் சுமார் 180 முதல் 250 கி.மீ. வரை இயக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும். மேலும், அதிவேக மின்னூட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் குறுகிய நேரத்திலேயே பேருந்தை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டுவர முடியும்.

தமிழ்நாடு அரசின் மின் வாகனக் கொள்கையின் படி, 2030-க்குள் போக்குவரத்து சேவையில் மின்சார வாகனங்களின் பங்கை அதிகரிக்கும் இலக்கின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படும். சிறிய ரக மின் பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சேவை நேரம் மற்றும் இயக்கத் தொடக்க தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *