இனிவரும் காலம் பெரியார் பிஞ்சுகளின் காலம்… குடும்ப விழாவில் பெரியார் உலக நிதி – ‘விடுதலை’ சந்தா வழங்கினர் – ‘போராட்ட வீரன்’ – குழந்தைக்குப் பெயர் சூட்டல்!

ஒரத்தநாட்டில் நடைபெற்ற குடும்ப விழாவில், நெடுவாக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி வை.குப்புசாமியின் நான்காம் தலைமுறை ‘பெரியார் பிஞ்சு’ ‘வி.அறவாழி, ‘பெரியார் உலக’த்திற்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். விழாவில் கவிதை வாசித்த ‘பெரியார் பிஞ்சு’ மா.பு.புகழின், மாணவர் அணி வி.புதியவன், இளைஞரணி ம.விவேக், மகளிர் பாசறை பொறியாளர் ப.முகில் ஆகியோர் கவிதை பாடினர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். (ஒரத்தநாடு, 31.5.2026) உடன் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் தோழர்கள். திருவாரூர் நகர துணைச் செயலாளர் துரைராஜ் – சுதா ஆகியோரின் மகள் அக்ஷரா – திவாகர் இணையரின் ஆண் குழந்தைக்கு ‘போராட்ட வீரன்’ என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார் (திருவாரூர், 31.5.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *