பொது போக்குவரத்து வாகனங்கள் பதிவை நிறுத்தியது நேபாள அரசு

காத்மாண்டு, மே 25- அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து வகையான புதிய பொது போக்குவரத்து வாகனங்களின் பதிவை, நேபாள அரசு காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு போன்ற நகர்புறங்களில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாளம் தன் பெட்ரோலிய தேவைகளுக்கு முற்றிலும் இறக்குமதியையே நம்பியுள்ளது.

இந்நிலையில், அனைத்து வகையான பொது போக்கு வரத்து புதிய வாகனங்களுக்கான பதிவை காலவரையின்றி நிறுத்தி வைக்க, அந்நாட்டு போக்குவரத்து துறை உத்தர விட்டுள்ளது. நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பிரச்சினை மற்றும் பொது போக்குவரத்தை முறையாக வும், அறிவியல் பூர்வமாகவும் நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தங் களை குறைக்கும் விதமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தடையானது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், மின்சார பொது போக்குவரத்து வாகனங் களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *