நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் ‘விபி ஜி ராம் ஜி’ சட்டம் ஜூலை 1 முதல் செயல்பாடு? சு. வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம்

புதுடில்லி, மே 12 – நூறுநாள் வேலைத் திட்ட த்தை ஒழித்துக் கட்டும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘விபி – ஜி ராம் ஜி’ சட்டம், ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்ப டுத்தப்பட உள்ளதாக ஒன்றிய பாஜக அரசு அறி வித்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பெருநிறுவனங்கள் தொழி லாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்ட வைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். இதைச் சட்ட மாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை மக்களவையிலேயே கடுமையாக எதிர்த்திருந்தோம்.

எனினும், நாடாளு மன்ற ஜனநாயகத்தைத் துளியும் மதிக்காத மோடி அரசு இச் சட்டங்களை ஒரு தலைபட்சமாக இயற் றியது. தற்போது இச்சட்டங்களுக்கான விதிகளை அறிவிக்கை செய்து அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது, ஒன்றிய பாஜக அரசு.

தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான சலு கைகளுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் தாக்குதலுக்கு வன்மை யான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை அழிக்க உரு வாக்கப்பட்டதுதான் விபி ஜி ராம் ஜி (VB G RAM G) சட்டம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இருந்த கடைசி பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பாது காப்பையும் அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எளிய மக்களின் உரிமையைப் பறித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் இச்சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சு. வெங்கடேசன்
எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.​​​​​​​

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *