அ.தி.மு.க. வேட்பாளர், வாக்குசேகரிப்பின்போது பெண்களுக்கு பணப் பட்டுவாடா! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

1 Min Read

அந்தியூர், ஏப்.15- ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அரி பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பெண்கள் பல இடங்களில் ஆரத்தி எடுத்தனர்.

வேட்பாளருக்கு வரவேற்பு கொடுத்த பெண்களுக்கு, அங்கு வந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலா ரூ. 100 விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் இவ்வாறு பணப்பட்டுவாடா செய்வது விதிமீறல் என்று சமூக ஆர்வலர்களும், மாற்றுக் கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

“பகிரங்கமாக பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பான காட்சிப் பதிவுகள் மற்றும் புகார்கள் தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், அந்தியூர் தொகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *