பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூடடம் 11.4.2026 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமைத் தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோ.வி.கோபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சிறப்பு சொற்பொழிவாக “கீழடி தொல்லியல் களம் – ஓர் ஆய்வு” என்னும் பொருளில் படக் காட்சிகளுடன், சென்னை-கிறித்துவக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச.தீபிகா சிறப்புரையாற்றினார். மு.இரா.மாணிக்கம் நன்றி கூறினார். நிகழ்வை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.

