அமெரிக்கா- ஈரான் போர் பதற்றம் அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கிறது சு.வெங்கடேசன் எம்.பி.,

1 Min Read

அமெரிக்கா- ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு எல்பிஜி எரிவாயு உருளை வாங்கியபின் மற்றொரு எரிவாயு உருளை வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக ஒன்றிய அரசு உயர்த்தியது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் எரிவாயு உருளைகளை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை.

ஒரு எரிவாயு உருளை பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த எரிவாயு உருளை பதிவு செய்ய முடியும்.’’

பன்னாட்டு அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன,” என குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *