உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக தொடர்ந்து பிணைகளை மறுப்பது, தனி மனித உரிமைக்கு எதிரானதே! புதிய வழக்குப் போட்டு அவர்களை சிறைக்கனுப்புவது சரியல்ல! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பிணை வழங்குவதுபற்றி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மாறாக, தொடர்ந்து பிணையை மறுப்பது, பிணை வழங்க வேண்டிய பட்சத்தில், புதிய வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது தனி மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள…
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நல்ல வார்த்தை கொண்டு காலம் பாராட்டும்! கவிப்பேரரசு வைரமுத்து
முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் ஒரு கல்விப் புரட்சியைப் பூரணம் செய்யும் காரணமாகும் மூளையை நிரப்புமுன் வயிற்றை நிரப்பும் இந்த மனிதாபிமானத் திட்டத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மொழியின் நல்ல வார்த்தைகள் கொண்டு காலம் பாராட்டும் வயிறு நிறைந்த மலர்களின் 21 லட்சம்…
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.75 கோடி செலவில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
உயர்கல்வித் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தல் சென்னை, ஜூலை 17- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.7.2024) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், புதுக்கோட்டை, திருச் சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை…
ரூபாய் 100 கோடி நில மோசடி புகார் அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது
கரூர், ஜூலை 17- ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஅய்டி காவல் துறையினர் கேரளாவில் நேற்று (16.7.2024) கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து…
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்
மண்ணச்சநல்லூரில் பரப்புரை மண்ணச்சநல்லூர், ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 14-07-2024 காலை 11.00…
கன்னியாகுமரியில் பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்
நாகர்கோவில், ஜூலை 17- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு மற்றும் மாநகர பகுதிகளில் நடந்த இந்தப் பரப்புரை நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.…
கிருட்டினகிரியில் நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணக்குழுவுக்கு வரவேற்பு
கிருட்டினகிரி, ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி - மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அய்ந்து மய்யங்களில் அய்ந்து குழுக்கள் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் 11.7.2024 அன்று…
19.07.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் - 104 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: ஞான வள்ளுவன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை அ.சங்கீதா (மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர், தருமபுரி) *தொடக்க உரை:…
ஜூலை 17: ‘திராவிட லெனின்’ டாக்டர் டி.எம்.நாயர் நினைவு நாள் (17.7.1919)
நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மூவரில் (டாக்டர் சி. நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர்) ஒருவர் தாரவாட் மாதவன் நாயர். தாரவாட்.மாதவன்.நாயர் 1868 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் பாலக்காடு அருகில் திரூர் கிராமத்தில் (தற்போதைய…
பெரியார் விடுக்கும் வினா! (1377)
இதுவரை நமது நாட்டில் செய்யப்பட்டு வந்த சீர்திருத்தம் என்பதெல்லாம் பாமர மக்களைப் படித்தவர்களும், பணக்காரரும் ஏய்ப்பதற்குக் கண்டுபிடித்த ஒரு சூழ்ச்சியே ஒழிய உண்மைச் சீர்திருத்தமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
