கேள்வி கேட்க உரிமை கிடையாதாம்! வாக்காளரிடம் பி.ஜே.பி. துணை முதலமைச்சர் வாக்குவாதம்!

1 Min Read

மும்பை, ஜன 9 வாக்களிக்க கூறினோம், பிரச்சாரம் செய்தோம், எங்களுக்கு வாக்களித்துள்ளீர்கள். அவ்வளவுதான், கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை, நீங்கள் ஒன்றும் என் முதலாளி கிடையாது என்று பாஜக ஆதரவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த மராட்டிய மாநில துணை முதலமைச்சர் பொதுமக்களை திட்டித் தீர்த்துள்ளார்.
மராட்டிய மாநி லத்தில் உள்ள, பாரா மதிக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் அஜித் பவார் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். மெடாட் கிராமத்தில் பெட்ரோல் நிலைய திறப்பு விழாவில் அஜித் பவார் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின்போது, மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த போது சிலர் மேடையின் அருகில் இருந்து அவரி டம் ஏதோ கேள்வி கேட்டார். இதனால் அஜித்பவார் கோபம் அடைந்தார்.

உடனே அவர் , ‘ நீங்கள் எனக்கு ஓட்டளித்தீர்கள். ஆனால் நீங்கள் என் முதலாளி அல்ல’ என கோபத்துடன் தெரி வித்தார். என்னை என்ன உங்களின் வேலைக்காரன் என்று நினைத்தீர்களா என கோபத்துடன் கத்தினார். . இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவெளியில் கேள்வி கேட்ட சாமா னியமக்களை அஜித் பவார் திட்டியதால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. அண்மையில் நடந்த, சட்டப்பேரவைத் தேர்தலில், சரத்பவாரின் தேசியவாத காங்கி ரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவின் ஆதரவோடு தேர்தல் சின்னம் மற்றும் கட்சி தலைமையகம் என அனைத்தும் கைப்பற்றி தேர்தலில் வெற்றி பெற்று துணை முதலமைச்சராக பதவியேற்றார். இவரது தேர்தல் வெற்றிக்காக பல கோடி ரூபாய்களை செலவழித்ததாகவும் பேசப்படுகிறது.

இவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இவர் மீதான ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் மோசடி தொடர்பான அத்தனை வழக்கையும் ஒன்றிய புலணாய்வு அமைப்பான சி.பி.அய். மற்றும் அமலாக்கத்துறை சேர்ந்து ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் ஊழல் பணம் என்று கைப்பற்றப்பட்ட ஆயிரம் கோடி ரொக்கமும், மற்றும் பிடிபட்ட அனைத்து சொத்துக்களையும் விடு வித்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *